உயிர் போற மூட்டு வலியா? உடனே இருக்கு தீர்வு !!!

mootu vali theera

வயோதிகத்தினால் சிலருக்கு தீராத மூட்டு வலி வந்து சேரும். மூட்டுகளில் ஏற்படும் தேய்மானம் மற்றும் உராய்வு காரணமாக வலி வந்து உயிர் போகும். இன்னதென்ன சொல்ல முடியாத அளவுக்கு துயரம் அதிகரிக்கும். எந்த வைத்தியம் செய்தாலும் சரியாகாது. அல்லது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு வலி குறைந்து மீண்டும் வலி வந்து பின்னி எடுக்கும். சில நேரங்களில் இந்த உலகத்தில் இந்த வலியோடு நாம வாழத்தான் வேண்டுமா என்று தோன்றும். 

mudakkathan keerai vaithiyam

வயோதிகர்களுக்கு அப்படி என்றால், வாலிப வயதுடையவர்களுக்கும் வலி வந்து உயிர் போகும். அதிக எடை, ஜங்க் புட் என்று சொல்லப்படும் துரித வகை உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதால் பக்க விளைவுகளாக மூட்டுவலி, உடல் வலி, முதுகு வந்து சேரும். 


சிலருக்கு வாத பிரச்னைகளால் வலி வந்து குத்தி எடுக்கும். அதிக நேரம் நின்று வேலை செய்பவர்கள், காலுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், கால்சியம் சத்து குறைபாடு உடையவர்கள் என பலருக்கும் மூட்டு வலி வந்து பின்னி எடுக்கும். 


குழந்தைகளுக்கு கூட சில நேரங்களில் மூட்டுகளில் அடிபடுதல், சத்து பற்றாக்குறை மற்றும் அதிக எடை காரணமாக மூட்டு வலி தொந்தரவு வந்து சேரும். எடுக்கும் சில மாத்திரைகள், மருந்துகளின் பக்க விளைவாக மூட்டு வலி ஏற்பட்டு, சிரமத்திற்கு உள்ளாவர்கள். 


மூட்டு வலி தீர்க்கும் மூலிகை மருத்துவம். 


மூட்டு வலி விலக முடக்கத்தான் கீரை 


முடக்கத்தான் கீரை. இது பெயரிலேயே முடக்கு வாத த்தை முடக்கும் என்ற பொருளை பொதிந்துள்ளது நமக்குத் தெரியவரும். எப்பேர்ப்பட்ட மூட்டு வலி, முழங்கால் வலி, கால் வலி க்கும் இது மிகச்சிறந்த இயற்கை மூலிகை கீரை. மருத்துவர் கு. சிவராம் இந்த கீரையை பற்றி மிக அழகாக எடுத்துரைக்கிறார். வீடியோவில் மிகத்தெளிவாக இது பற்றி நமக்கு விளக்குகிறார். 



இந்த முடக்கறுத்தான் கீரை என்ன செய்யும் என்றால் முடக்கு வாத த்தால் பாதிக்கப்பட்ட மூட்டுகளை சரி செய்யும். மருத்துவர் அறிவரைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் இந்தக் கீரையை வாரமிருமுறை சூப்பாகவோ அல்லது வதக்ககலாவோ, தோசையில் கலந்தோ எடுத்துக்கொள்ள மிக விரைவில் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் பெருகி, நோய்க்கு காரணமான காரணிகளை அழித்து, நல்ல திடகாத்திரமான உடல் நலனை கொடுக்கிறது. 

மூட்டு வாத வீக்கம் குறைய வைத்தியம் 


மூட்டுகளில் நீர் தேங்கி, மூட்டுகள் வீங்கி காணப்படும். வலியால் அல்லல் உறுவர். அப்படிபட்டவர்களுக்கு இந்த வைத்திய முறை சரியான தீர்வாக இருக்கும். 

தேவதாரு, சாரணைக்கொடி, சீந்தில் கொடி, சித்தரத்தை, நெருஞ்சில், ஆமணக்கு வேர் இவை அனைத்திலும் 100 கிராம் எடுத்துக்கொண்டு, அவற்றை பெருந்துகள்களாக இடித்து, அதை ஒரு லிட்டர் நீரில் போட்டு, தீயிலிட்டு கொதித்து, 150 மிலி லிட்டர் வரும் வரை சுண்ட காய்த்து, அதை வடி கட்டி, தினமும் காலை 50 மிலி என்ற அளவில் மூன்று வேளை சாப்பிட்டு வர, "முடக்கு வாதம்" குறையும். 

மூன்று நாட்கள் இதுபோல சாப்பிட்டு வர படிபடியாக முடக்கு வாதம் குறைந்து, சகஜ நிலைக்குத் திரும்பலாம். 

Post a Comment

0 Comments