தமிழக பாரம்பரியங்களில் ஒன்று காது குத்து. குழந்தை பிறந்து 7 அல்லது 9 மாதங்களில் இந்த வைபவர் நடைபெறும். தமிழகம் மட்டுமல்லாமல், உலகின் பல இடங்களிலும் இந்த இந்து சம்பிரதாயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றனர்.
ஆண்கள் என்றால், சிறிது காலத்திற்கு பிறகு காதில் உள்ள ஆபரணத்தை அகற்றிவிடுவார்கள். அதனால் காதில் ஏற்படும் ஓட்டை தானாகவே அடைப்பட்டுவிடும். பெண்களுக்கும் சிலர் எடுத்து விடுவதுண்டு. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அப்படி எடுப்பதில்லை. குறிப்பாக அந்தக்காலத்தில் அதிக எடை உடன் கூடிய ஆபரணங்களை விரும்பி அணிந்து வருவர். அப்படி அணிவது நாட்பட நாட்பட "வெயிட்" தாங்காமல், காது இழுத்துக்கொண்டு வந்து பெரிய ஓட்டையாக மாறத்தொடங்கும்.
வயது ஆக, ஆக, தோலின் இலகுதன்மை அதிகமாகி, அது பெரீய்யய்ய ஓட்டையாக மாறி ஒரு விதமான விருப்பமில்லாத தன்மையை உருவாக்கிவிடும்.
இள வயதிலேயே கூட காது தாங்கும் அளவிற்கு மேல் அதிக எடையுடன் கூடிய தோடுகளை அணிவதால் காதில் ஓட்டை பெரியதாகிவிடும். அப்படி தோன்றிய ஓட்டைகளை சிலர் வெட்டி தையல் போட்டு சரி செய்துவிடுவர். அதற்கு மருத்துவச்செலவு அதிகமாக இருக்கும்.
ஒரு சிலர் அப்படியே விட்டுவிடுவர். இதனால் பார்ப்பதற்கு ஒருவிதமான வயோதிக தோற்றத்தை, அழகின்மையை காட்டும். அப்படி செலவு செய்ய மனமில்லாதவர்கள், பணமில்லாதவர்கள் கூட தங்களது காது ஓட்டையை இதை பின்பற்றுவதன் மூலம் ஓரே நாளில் சரிசெய்துகொள்ள முடியும். அதுபற்றிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்துப் பயன்பெறவும்.
KATHU OTTAI SARI SEIYYA
0 Comments