தளபதி மகளின் புதிய புகைப்படம் . ! விஜய் மகளா இது என வாய் பிளக்கும் ரசிகர்கள் ! (புகைப்படம் உள்ளே)

தமிழ் சினிமாவை பொருத்தவரை தளபதிக்கு இன்னும் ஈடு கொடுக்க எந்த நடிகராலும் முடியவில்லை. புகழின் உச்சத்தில் இருக்கும் இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டு தான். பல வருடங்களாக முன்னணி நட்சத்திரமாக விளங்கும் விஜய், பிகில் படத்திற்கு பிறகு "மாஸ்டர்" படத்தில் நடித்தார். அதன் பிறகு கொரோனோ காரணமாக படபடிப்புகள் நிறுத்தப்பட்ட வேளையில் வீட்டில் இருந்த அவர் பல நடிகர்களுக்கு முன்னோடியாக சில செயல்களை செய்து வந்தார். அந்த வகையில் சமீபத்தில் மரக்கன்று நடும் சேலன்ஜில் மரக்கன்று நடுவதை போன்ற போட்டோ வெளியிடப்பட்டு வைரல் ஆனது.

தளபதி திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆகிறது. சங்கீதா என்ற டாக்டரை மணமுடித்த அவர் இதுவரைக்கும் அதே இளமையுடன் அவரை காதலித்து வருவதாக தெரிவித்திருந்தது திருமணமான தம்பதிகள் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது. விஜய்யின் தீவிர ரசிகையான சங்கீதா, தான் விருப்பட்ட நடிகரையே திருமணம் செய்து கொண்டு, இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். இது அனைவருக்கும் தெரிந்ததே.



சஞ்சய், சாஷா என்ற இரு குழந்தைகளுக்கு தாயாகி, குடும்பத்தை கவனித்து வருகின்றார். சினிமா பட சூட்டிங் இல்லாத போது விஜய் உடன் குடும்பபத்தார் சுற்றுலா செல்வது வழக்கத்தில் உள்ளது. வேலை இல்லாத போது குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருபவர் தளபதி விஜய்.

மகன் விருப்பபட்டார் என்ற காரணத்தற்காக, வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு அவரை ஆட வைத்து பெருமைபட்டுக்கொண்ட விஜய், தொடர்ந்து அவர் சினிமாவில் புதிய பாதையில் பயணிக்கும் வகையில் சினிமாதொடர்பான படிப்பை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். மகளையும் சினிமாவில் நடிக்க வைத்திருக்கிறார்.

எதிர்காலத்தில் தன்னுடைய மகன் சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவுடன் இருக்கும் விஜய், தற்போதைக்கு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டிருக்கிறார். அதை ஏற்றுக்கொண்ட மகன் சஞ்சஜ், வெளிநாட்டில் கலைத் தொடர்புடைய படிப்பை படித்துக்கொண்டிருக்கிறார்.



இதனிடையே அவருடைய மகன் சஞ்சய், வெளிநாட்டில் சிக்கித் தவித்து, ஒரு வழியாக தாயகம் திரும்பிய வேளையில் அவருக்கு கொரோனா இருப்பதாக தகவல் வெளியாகியது. 15 நாட்கள் உள்ளிருப்பு தனிமைப்படுத்தலுக்குப் பிறகு அவருடன் நலமுடன் உள்ளார் என்ற மகிழ்ச்சி செய்தி வெளியானது.  கொரோனோ பிரச்னையால் பெரிய விஐபி க்கள் கூட , வீட்டில் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டபோதும், சில பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து, புகைப்படங்களை வெளியிடுவதும்.. கொரோனோ குறித்த விழிப்புணர்வுகளை அளிப்பதுமாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் தளபதி மகள் தன் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்டு Unseen Photos இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Post a Comment

0 Comments