குசு வெளியேறும்பொது துர்நாற்றம் வீசினால்.. எச்சரிக்கை மணி !

kusu natram neenga

ஒவ்வொருவருக்கும் ஆசன வாயில் வாயு வெளியேறுவது என்பது இயற்கையானதுதான். ஆனால் அது துர் நாற்றத்தை வெளிப்படும்பொழுதுதான் பிரச்னையே துவங்குகிறது. சாதாரணமாக ஜீரண மண்டலத்தில் ஏதும் பிரச்னை இல்லாதவரைக்கும் வாயு வெளியேறினால் கூட நாற்றம் ஏதும் இல்லாமல் இருக்கும்.

அப்படி இருந்தால் உடலின் ஜீரண மண்டலம் சீரான இயக்கத்தில் உள்ளது என்று பொருள். அதுவே அசிங்கமாக, பிறர் முகம் சுளிக்கும்படி துர்நாற்றம் வீசும்படி இருந்தால், ஜீரண  மண்டலத்தில், வாயு தங்கி பிரச்னை ஏற்படுத்துகிறது என்று பொருள்.

வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு கொள்ளுங்கள். இது வாயுவை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுவதால் வாய்வு தடுக்கப்படுகிறது.

மசாலா பொருட்களான சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன் இதனை வெறும் வாயில் மென்றால் உடனே நல்ல பலன் கிடைக்கும்.

புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும் போது புதினா இலைகளை மென்றால் நல்ல தீர்வு கிடைக்கும். புதினா எண்ணெய் வெந்நீரில் ஒரு துளி கலந்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.

தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிறது. மேலும் இவை அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

ஆப்பிளைப் போன்ற சத்துக்களுடன் இருக்கும் பேரிக்காயும் வாய்வுத் தொல்லையிலிருந்து விடுதலை தருகிறது. ஜீரண சக்தியையும் தூண்டும். தினமும் 1 பேரிக்காய் சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை உண்டாகாது.

சீரகம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் சக்கரையோடு சேர்த்து உண்டு வந்தால் வாயு தொல்லை நீங்கும்.

இப்படி செய்வதன் மூலம் துர்நாற்றத்துடன் வெளியேறும் வாயு பிரச்னையை தடுத்து, நாலு பேருக்கு மத்தியில் சத்ததுடன் குசு விட்டாலும், வெறும் கல கல சிரிப்புடன் முடிந்து விடும். 

Post a Comment

0 Comments