தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்குபவரா? நீங்க பேரதிர்ஷ்டசாலிதான்! ஏன் தெரியுமா?

kalgalukku naduve thalai anai
எவ்வளவு தான் நாள் முழுவதும் அயராது உழைத்தாலும், வீட்டிற்கு வந்து படுக்கையில் தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது.

ஆனால் என்ன அவ்வாறு படுக்கையில் தூங்கும் போது ஆங்காங்கு சிறு வலிகளை சந்திப்போம். இதற்கு காரணம் நாம் தூங்கும் நிலை தான்.

ஒருவரின் முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு தூங்கும் நிலையானது மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் ஒரே நிலையில், அதுவும் தவறான நிலையில் தூங்கும் போது, முதுகெலும்பிற்கு போதுமான ஆதரவு கிடைக்கப் பெறாமல், அதன் விளைவாக வலி, பிடிப்பு மற்றும் உட்காயங்களை உண்டாக்கும்.

எனவே இரவு தூங்கும் போது சரியான நிலையில் தூங்க வேண்டியது அவசியம். எனவே தூங்கும் போது – முக்கியமாக பக்கவாட்டில் தூங்கும் போது கூட உங்கள் உடலை சரியான வழியில் நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் பொருத்தமான மெத்தை ஒன்றை தேர்ந்தெடுத்து, தலையணை பயன்படுத்தி முதுகெலும்பை ஆரோக்கியமான வளைவுக்கு மாற்றிவிடலாம்.

ஆரோக்கியமான தூக்கத்தினை பெற என்ன செய்யலாம்
தூங்கும் போது கால்களுக்கு இடையே தலையணையை வைத்துக் கொள்வதன் மூலம், அது ஆறுதலை அளிப்பதோடு, முழங்கால்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்திருப்பதன் மூலம் அழுத்தம் நீக்கப்படுகிறது.

இது உங்கள் இடுப்பு பகுதி சீரமைக்கப்படுவதை உறுதி செய்கிறது.


நன்மைகள்
கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கும் போது, அது இடுப்பில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கிறது.

முதுகெலும்புகள் சீரமைப்பில் இருந்து நகர்வதையும் தடுக்கிறது.

கீழ் முதுகு வலி அல்லது கால் வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக சியாட்டிகா உள்ளவர்களுக்கு, தலையணையை கால்களுக்கு இடையே வைத்து தூங்குவது மிகவும் நல்லது.

ஒருபுறமாக தூங்கும் போது, உங்கள் மேல் கால் ஓய்வெடுக்க முன்னோக்கி மெத்தையை பார்த்து செல்லக்கூடும். இது கீழ் முதுகில் ஒருவித அழுத்தத்தைக் கொடுத்து, சியாட்டிக் நரம்பை எரிச்சலடையச் செய்யும்.


குறட்டை விடுபவர்களுக்கு பக்கவாட்டு தூக்க நிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏனெனில் இந்த தூக்க நிலையில், காற்றுப் பாதைகள் மிகவும் நிலையானவை மற்றும் காற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.

உங்கள் முதுகெலும்பை சீரமைத்து வைத்திருப்பது, கழுத்து மற்றும் முதுகு வலியைக் குறைக்கிறது. அதோடு இது தூக்கத்தில் மூச்சுத்திணறல்/குறட்டை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.


முக்கிய குறிப்பு
உடலின் ஆற்றலையும், மன விழிப்புணர்வையும் புதுப்பிக்க ஒரு நல்ல இரவு தூக்கம் அவசியம்.

இது உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், அடுத்த நாளுக்கு உங்களை தயார்படுத்தவும் உதவுவது மட்டுமல்லாமல், நோயில் இருந்து மீளவோ அல்லது காயத்தில் இருந்து குணமடையவோ உதவும்.

நீங்கள் தூங்கி எழுந்திருக்கும் போது, ஏதேனும் வலியை உணர்ந்தால், உடனே உங்கள் தூக்க தோரணையை சரிபார்க்கவும்.
மேலும் ஒவ்வொரு இரவு தூங்கும் போதும் தூக்க தோரணையை கவனிக்க வேண்டியது அவசியம்.

அதேப் போல் மறுநாள் காலையில் எழும் போது வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்.

Post a Comment

0 Comments