கைலாசா கரன்சியை பார்ப்பதற்கு வெயிட்டிங் ! நித்யானந்தாவை கலாய்த்த நடிகர் நட்டு !

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் தன்னை பிரபலமாக வைத்திருக்கும் சாமியார் நித்தியானந்தா "கைலாசா" நாடு உருவாக்கி இருப்பதாக தகவல் அளித்ததிலிருந்து அவ்வப்பொழுது அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அவர் கைலாசா நாட்டிற்காக புதிய வங்கி உருவாக்கப்பட்டிருப்பதாகவும், கைலாசா நாட்டிற்கு, வெளிநாட்டு, உள்நாட்டு வர்த்தகங்களுக்கா கரன்சி தனிபட்ட முறையில் உருவாகியிருப்பதாகவும் கூறியிருந்தார்.

உலகில் கொரோனா இல்லாத ஒரே நாடு கைலாசா தான் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் கலாய்த்த வந்த இந்த வேளையில், அந்த நாட்டிற்காக புதிய "கரன்சி" உருவாக்கியிருப்பதாக வெளிவந்த தகவல்கள் மேலும் ஆர்வைத்தை துண்டியுள்ளது.

இதைப்பார்த்த நடிகர் நட்டு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கைலாசா" நாட்டின் கரன்சி எப்படி இருக்கும் என பார்ப்பதற்கு வெயிட்டிங் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments