விஜய் - சூர்யா மனைவிகள் பற்றி அவதூறு பேசிய நடிகை மீரா மிதுன்.. ஏம்மா.. உனக்கு வேற வேலையே இல்லையா? ரசிகர்கள் கொந்தளிப்பு !!!


தன்னைத்தானே சூப்பர் மாடல் என சொல்லிக் கொள்ளும் நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நெபோடிசம் குறித்து பேசுவதாக சொல்லிக்கொண்டு சூர்யா மற்றும் விஜய் இருவர் குறித்தும் சர்ச்சையான கருத்துக்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

சூர்யாவுக்கு நடிப்பே வராது, விஜய்யின் படங்கள் தொடர்ந்து நட்டம் என அவர் கூறியுள்ள கருத்துக்கள் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனால் அவர்கள் மீரா மிதுனின் டுவிட்டர் பக்கத்தில் அவரை மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளில் திட்டி கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்களின் இந்த செயலுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு தானும் அதேபோல தரம் தாழ்ந்த வார்த்தைகளில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். அதில் “சூர்யா, விஜய் ரசிகர்கள் என்னை ஆபாசமாக திட்டினால், பதிலுக்கு நான் சூர்யாவின் மனைவி ஜோதிகா மற்றும் விஜய்யின் மனைவி சங்கீதா ஆகியோர் குறித்து அதே ஆபாச வார்த்தைகளில் வீடியோ வெளியிடுவேன்..

நக்மாவின் தயவால் சினிமாவுக்குள் நுழைந்தவர் அவரது தங்கை ஜோதிகா. அவரது ரகசியங்கள் எல்லாம் கோலிவுட்டுக்கே தெரியும்.. சூர்யாவை திருமணம் செய்துகொண்டபின் புனித பசுவாக மாறிவிட்டார். விஜய்யின் மனைவி சங்கீதாவின் லண்டன் ரகசியங்கள் எல்லாம் எனக்கு தெரியும்.. சூர்யா, விஜய் ரசிகர்கள் என்னை திட்டுவதை நிறுத்தாவிட்டால் அவற்றை வெளியிடுவேன்.. எனக்கும் ஒரு காலம் வரும்.. அப்போது நான் தமிழகத்தின் முதலமைச்சராக ஆவேன்.. அப்போது இதுபோன்ற ரசிகர்களை சைபர் புல்லிங் வழக்கில் உள்ளே தள்ளுவேன்” என்றும் கூறியுள்ளார்.

மீரா மிதுனின் பேச்சு நாளுக்கு நாள் வரம்பு மீறி போவது நன்றாகவே தெரிகிறது. ரசிகர்கள் ஆபாசமாக திட்டினால் அவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளிப்பதை விட்டுவிட்டு சம்பந்தப்பட்ட நடிகர்களின் மனைவிகளை பற்றியே ஆபாசமாக பேச ஆரம்பித்துள்ள மீரா மிதுனின் இந்த போக்கிற்கு நடிகர் சங்கம் தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்குமா என்கிற கேள்வி ரசிகர்களிடம் மட்டுமல்ல, திரையுலகிலும் கூட எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments