அந்த படத்தில் அந்த மாதிரி ஏன் நடிச்சீங்க? திடீர் கேள்வியால் கதி கலங்கி போன ஹரீஸ் கல்யாண் சொன்ன பதில் என்ன தெரியுமா?


சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது குதிரை கொம்பு. வாய்ப்புக்காக பல லட்சக்கணக்கானோர் தூக்கம் கெட்டி, பசி, பட்டினி இருந்து ஏங்கி நிற்கின்றனர். சினிமா கனவோடு வரும் அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எங்காவது ஒரு கூட்டத்தில் , கூட்டமோடு கூட்டமாக நிற்கும் துணை நடிகராக கூட பல வருடங்கள் போராட வேண்டியிருக்கும்.

பிரபலங்களின் வாரிசுகள் என்றால், நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் திறமையோடு இருப்பவர்கள் அதில் வெல்வார்கள். மற்றவர்கள் ஓட ஓட துரத்தி அடிப்பார்கள். இன்று நாம் காணும் கதாநாயகர்கள் பலர் நிலைக்காத துக்கு காரணம் திறமையின்மைதான். நடிப்புத்திறமை, பாட்டு, சண்டைக்காட்சிகளில் நடிக்க நல்ல கட்டுக்கோப்பான உடம்பு என பல திறமைகளை வளர்த்துக் கொண்டவர்கள் நின்று வென்று காட்டுகிறார்கள்.

சிலர் 18+ படங்களில் நடித்தாவது முன்னுக்கு வர வேண்டும் என்று கூச்சப்படாமல் "அந்த" மாதிரி படங்களில் நடித்து பெயர் பெறுகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஹரீஸ் கல்யான் நடித்து இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் அவர் நடித்த படங்கள் சக்கை போடு போட்டது. குறிப்பாக பியார்  பிரேமா காதல் அவருக்கு பெயர் பெற்றுத் தந்தது. இதனையடுத்து அவர் நடித்த தாராள பிரபு படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் மகிழ்ச்சியில் இருந்த அவரை ஒரு பேட்டியில் , "நீங்கள் ஏன் அந்த மாதிரியான படத்தில் நடித்தீர்கள்?" என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் , நான் அறிமுகமான ‘சிந்து சமவெளி’ இதில் அந்த படத்தில் ஒரு மாதிரியாக நடிக்க வேண்டியிருந்த்து. அதை ஒப்புக்கொள்கிறேன். வேறு வழியில்லாமல் நடிக்க வேண்டியதாக போய்விட்டது. அந்த படம் வெளி வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. ஏன் அப்படி நடித்தீர்கள் என கேட்கும்போது மேலும் அது குறித்த என்ன விளக்கம் கொடுப்பது என எனக்கே தெரியவில்லை என்றார்.


Post a Comment

0 Comments