உத்திரபிரதேசம், மிர்சா பூரில் கங்கை ந்தியில் ஒருவர் தவறி விழுந்து விட்டார். அவரை மீட்க மீட்பு குழுவினர் முயற்சித்து வந்தனர். அந்த நிலையில் அவரை மீட்பதை வேடிக்கைப் பார்க்க கூட்டம் கூடியது. அப்பொழுது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை போலிஸ் கார ர் பின்னாலிருந்து எட்டி உதைத்து ஆற்றுக்குள் தள்ளினார்.
எதிர்பாராத விதமாக நடந்த இந்த தாக்குதலிக் அந்த இளைஞர் நிலை தடுமாறி திடு திப்பென ஆற்றினுள் சரிந்தார். அப்பொழுது அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவரை போன் பேசியவாறே வந்து காலை தட்டி விட்டு ஆற்றில் தள்ளி விட்ட மோசமான செயலை நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர்.
போலீஸ் என்றால், மக்களை காப்பதற்கு தானே ஒழிய, அவர்களை தாக்கி, மோசமான வார்த்தைகள் பேசி, அழிப்பதற்கு அல்ல. சமீபத்தில் அரசு உத்தரவினை மீறி கைப்பேசி கடையை திறந்து வைத்திருந்த சாத்தான் குளத்தை சேர்ந்த தந்தை - மகன் இரட்டை கொலை சம்பவம் பதபதைக்க வைத்தது நினைவிருக்கும். அதுபோல இந்தசம்பவமும் பார்ப்பவர்கள் மனதில் கோபத்தை கிளறி விட்டிருக்கிறது. இந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் அந்த காவலரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இதுபோன்ற சிலர் செய்யும் செயல்களால் ஒட்டு மொத்த காவல் துறைக்கே அவப்பெயர் என துறை சார்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த வீடியவோவினை பார்த்துவிட்டு கருத்து தெரிவித்துள்ளனர்.
இதோ அந்த வீடியோ;
मिर्ज़ापुर-पुलिस ऐसे ही निरीह जनता को पीछे से दुलत्ती मारती है।विंध्याचल में गंगा के किनारे खड़े युवक को नवागत कोतवाल ने मारी पीछे से लात।युवक गिरा नीचे गंगा में। @myogiadityanath @Uppolice @adgzonevaranasi @digmirzapur @mirzapurpolice pic.twitter.com/vwkLw9IwmS— बहुजन जागृति मंच (BSP)🇪🇺 🇮🇳 (@DR_Ambedkarji) July 29, 2020
0 Comments