சற்றுமுன்: விஜய் மகன் சன்ஜய்க்கு கொரோனோ தொற்றா? 15 நாள் தனிமைக்குப் பிறகு என்ன நடந்தது?


விஐபி க்கள் என்றாலே அவர்கள் நோயிலிருந்து விடுபட்டு சீக்கிரமாக வீடு திரும்பி விடுவர் என்ற நம்பிக்கை கொரோனோ வருவதற்கு முன்பு இருந்தது. ஆனால் இந்த வைரஸ் நோய் அப்படியல்ல. காற்று மூலம் பரவுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்று யாரையும் விட்டு வைப்பதில்லை. குறிப்பாக அதற்கு வைத்தியம் செய்யும் மருத்துவர்களை கூட விடுவதில்லை. அந்த வகையில் சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த நடிகர் விஜய் மகன் சன்ஜய் 15 நாட்கள் தனிமைப்படுத்தப் பின் வீடு திரும்பியிருக்கிறார். 

ஆனால் அவருக்கு இன்னும் கொரோனோ தொற்று உள்ளதா இல்லையா என முழுமையாக தெரியாத நிலையில் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. ஆனால் ஊடகங்களின் தகவல்கள் படி அவருக்கு எந்த ஒரு தொற்றும் இல்லை என்று தெரியவருகிறது. இதனால் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கும் வேளையில் சற்றுமுன் கிடைத்த தகவல்படி அவருக்கு இன்னும் முழுமையாக பரிசோதனை செய்யப்படவில்லை என்பது உறுதியாகிறது. 


வீட்டிற்கு வந்த அவருக்கு இலேசான காய்ச்சல் மற்றும் வரட்டு இருமல் இருப்பதாகவும், இதனால் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்படுகிறது. இது பற்றி விஜய் வட்டாரங்கள் தெரிவித்ததாவது. 


சன்ஜ்ய் நலமுடன் இருப்பதாகவும், வெளிநாட்டிலிருந்து ஒவ்வொரு முறையும் வரும்போதும் ஏற்படும் சாதாரண ஒவ்வாமை தான் அது என்றும். கொரோனோ தொற்று வைரஸ் ஏதும் அவரது இரத்த த்தில் இல்லை என்றும் தெளிவாக அறிக்கை விட்டுள்ளனர். சில உடல்களில் நாட்கள் பல கணக்கில் தங்கி அவருக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாமலேயே கொரோனோ வைரஸ் நீங்கிவிடும் என்றும், இதனால் அவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு பாதிப்பு , தொற்று ஏற்படும் என்றும் ஏற்கனவே மருத்துவ உலகில் பரப்பப்பட்டு வரும் செய்தியாகும். 

இதனால் விஜய் வீட்டில் உள்ளவர்களே சன்ஜய் உடன் நெருக்கம் காட்டாமல் இன்னும் சில நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருக்குமாறு சன்ஜய்யை கேட்டுக்கொண்டுள்ளனர். இதை புரிந்துகொண்ட அவர் வீட்டில் தனிமை யே ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவரது அம்மாவும் மருத்துவர் ஆகையால், அவரது உடல் நலன் குறித்து மிக கவனமுடன் இருப்பதாகவும், மற்றவர்களுக்கு சன்ஜய் ஆல் எந்த தொந்தரவும், தொற்றும் வரக்கூடாது என்பதில் கவமானக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில் இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், சன்ஜய்க்கு கொரோனோ தொற்று இல்லை என்றும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. எனினும் உண்மை எது என்று இதுவரைக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

Post a Comment

0 Comments