உங்கள் குழந்தை இருமிகிட்டும் தும்மிகிட்டும் இருக்கா? இப்படி செய்து பாருங்க ! உடனே சரியாகும் !

சிறிய குழந்தைகளின் காய்ச்சலை குறைக்க குளிர்ந்த நீரில் குளிக்க வையுங்கள் அல்லது ஸ்பாஞ் குளியல் அளியுங்கள். இது உடலின் உஷ்ணத்தை சீர்படுத்தும். சிறிய குழந்தைகள் என்றால் தினமும் 2 அல்லது 3 முறை ஸ்பாஞ் குளியலில் ஈடுபடுத்துங்கள். சாதாரண நீரில் ஒரு துணியை நனைத்து, அதனை பிழிந்து கொள்ளுங்கள்.

பின் அக்குள், பாதம், கைகள் மற்றும் இடுப்பு பகுதிகளில் ஒற்றி எடுங்கள். இது உடலின் வெப்பநிலையை குறைக்கும். மற்றொரு வழியும் கூட உள்ளது; குளிர்ந்த ஈர துணியை குழந்தையின் நெற்றியில் வைத்து, அதனை சில நிமிடங்களுக்கு ஒரு முறை மாற்றவும்.

குறிப்பு: மிகவும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது உட்புற உடலின் உஷ்ணத்தை அதிகரித்து விடும்.


எலுமிச்சை:

 4 எலுமிச்சையின் சாறு மற்றும் தோள்களுடன் 1 தேக்கரண்டி இஞ்சி துண்டுகளை ஒரு வாணலியில் போடவும். அதனை மூடும் அளவிற்கு போதுமான நீரை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதனை மூடி போட்டு மூடி விட்டு ஒரு 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின் நீரை வடிகட்டவும்.

sali kaichal


சரிசமமான அளவில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி அதனை நீர்மமாக்கவும். சுவைக்காக சற்று தேனையும் அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். இந்த சூடான லெமனேட் பானத்தை உங்கள் குழந்தைக்கு தினமும் சில முறை கொடுக்கவும்.


 குறிப்பு: 1 வருடத்திற்கு குறைவான குழந்தைகளுக்கு தேனுக்கு பதில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும்.


தேன் :

1 வயது அல்லது மேலே உள்ள குழந்தைகள் பொதுவான சளி அல்லது இருமலால் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பாதுகாப்பான சிகிச்சையாக இருப்பது தேன். 2 தேக்கரண்டி தேனை 1 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன் சேர்த்து கொள்ளவும். இதை குழந்தைகள் குணமடையும் வரை சில மணிக்கு ஒரு முறை கொடுத்து வரவும். வெதுவெதுப்பான ஒரு டம்ளர் பாலுடன் தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் நீங்கி, நெஞ்சு வலி குறையும்.

 குறிப்பு: 1 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுக்க வேண்டும். அதற்கு காரணம் தேனில் உள்ள பாக்டீரியா குழந்தை பருவத்துக்குரிய கிளாஸ்டிரீயம் நச்சேற்றத்தை உருவாக்கலாம்.


ஆரஞ்சு:

 ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமின் சி, சளியை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இருமல், தொண்டைப் புண் மற்றும் ஒழுகும் மூக்கு போன்ற அறிகுறிகளைப் போக்க, இது நோய் எதிர்ப்பு சக்தியையும் ஊக்குவிக்கும்.

2 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தினமும் 1 முதல் 2 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் கொடுங்கள். சிறிய குழந்தைகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் அளவிலான தண்ணீரை கலந்து, சீரான இடைவெளிகளுள் கொடுக்கவும். பெரிய குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழத்தை அப்படியே உண்ணச் சொல்லலாம். இது வைட்டமின் சி உட்கொள்ளுதலை அதிகரிக்கும்.


இஞ்சி:

 6 கப் தண்ணீர், ½ கப் மெல்லியதாக நறுக்கப்பட்ட இஞ்சி மற்றும் 2 லவங்கப்பட்டையை ஒரு வாணலியில் போடவும். குறைந்த தீயில் அதனை 20 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும். பின் வடிகட்டவும். அதனுடன் பச்சை தேன் அல்லது சர்க்கரையை கலக்கவும். இதனை உங்கள் குழந்தைக்கு தினமும் பல தடவை கொடுக்கவும். ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இதனுடன் சரிசமமான அளவு தண்ணீர் கலந்து கொடுக்கலாம்.


தாய்ப்பால்:

 குழந்தைகளுக்கு, குறிப்பாக அவர்கள் நோய்வாய் பட்டிருக்கும் போது, தாய்ப்பால் மிகவும் அவசியமானதாகும். தொற்றுக்களை எதிர்த்து போராடி, சீக்கிரமாகவே குணமடைய இது தனித்துவமான சமநிலை அளவில் ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிக்கும்.

சளி அல்லது இருமலை உண்டாக்கும் தொற்றை விரட்ட, அதுவும் 6 மாதத்திற்கு குறைவான குழந்தை என்றால், அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தாக வேண்டும். 

Post a Comment

0 Comments