அனைவரும் எதிர்பார்த்த கொரோனோ எதிர்ப்பு மருந்து ரெடி ! இத்தாலி விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்து உரிமை கோருகிறது !!!

இத்தனை நாள் நம்மை ஆட்டி படைத்துக் கொண்டிருந்த கொரோன வைரஸ்க்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக இத்தாலி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் பல உயிர்களை கா வு வாங்கிய இந்த உயிர் கொல்லி தொற்று நோய் மிக எளிதில் காற்றில் பரவக்கூடியதாகும். இந்நோய்க்கு அஞ்சி, உலக நாடுகள் "டாக் டவுன்" ஐ தொடங்கியது. இந்நிலையில் அதை எதிர்த்து போராடி வெற்றி பெறும் மருந்தை உருவாக்குவதில் உலக நாடுகள் அதிக அக்கறையுடன் முன்னெடுத்தன.

ஆனால் வைரஸ் எதிர்ப்பு மருந்து தயாரிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. அது தன்னுடைய அமைத்து அவ்வப்பொழுது மாற்றிக்கொண்டே இருப்பதால் மருந்து கண்டுபிடிப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்து வந்தது.

அதற்கு தமிழகத்தில் சித்த மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்று சில சித்த மருத்துவர்கள், பாரம்பரிய மருத்துவர்கள் வீடியோ மூலம் கதறி வந்த நிலையில், அந்த வைரஸ்க்கு எதிர்ப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை . அது கடினமானது என அரசு அவர்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கொரோனா பாதிப்புக்கு "கப சுர குடிநீர்" நல்ல தீர்வாக இருக்கும் என்ற தகவலின் அடிப்படையில் அரசே வழங்கி வந்தது.

எனினும் கொரோனோ வைரஸ் பரவுவது அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்நிலையில் தான் இத்தாலி விஞ்ஞானிகள் கொரோனோ வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது.

corono virus ku marunthu


எலியின் உடலில் பரிசோதித்து பார்த்ததில் அந்த வைரஸ்க்கு எதிராக ஆன்டி பாடிகள் உருவானதை உறுதி செய்துள்ளனர். அந்த மருந்தானது செல்களின் புதிய எதிர்ப்பு சக்தி உருவாக்கி, வைரஸ் எதிராக போராடி அழிக்க வைக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக நுரையீரல் செல்களில் அம் மருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு, நல்ல ஒரு வைரஸ் எதிர்ப்பை உருவாக்குகிறது என உறுதியாக கூறியுள்ளனர். இம்மருந்து தற்பொழுது உரிமை கோரி வரும் இத்தாலி, இம் மருந்து வருவதற்கு இன்னும் சில காலம் ஆகும் என தெரிவித்துள்ளது. பேட்டர்ன் ரைட் கிடைத்ததும் மிக விரைவாக மருந்து உற்பத்தி செய்யப்பட்டு, அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments