நோயாளிகளை காப்பாற்ற முடியாமல் மனமுடைந்த மருத்துவர் செய்த செயல் ! உலகையே ஒரு நிமிடத்தில் அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம் !

மருத்துவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் இதுதான். நோயாளிகளை முடிந்தவரையில் காப்பாற்ற முயற்சிப்பார்கள். சில நேரங்களில் அவர்களை மீறி நோயாளிகளின் உடல் ஒத்துழைக்காத்தால் மர ண ம் ஏற்படும். சில நேரங்களில் போதிய வாய்ப்பு இருந்தும், நோய் தீவிரத்தால் பாதிக்கப்பட்டு கண்ணெதிரேயே உயிரி ழப்பு ஏற்படும்... இதனால் மருத்துவர்கள் அதிக மன அழுத்த த்தில் சிக்கிக் கொள்வார்கள். ஒவ்வொரு மருத்துருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்னை இது. என்னதான் அடுத்த நோயாளிகளை கவனிக்க சென்றாலும், சில சம்பவங்களை மறக்க இயலாது. அதுபோலதான் அமெரிக்காவிலும் ஒரு சம்பவ ம் நடைபெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக இதன் பாதிப்பானது அமெரிக்காவில் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் நியூயார்க் பிரெஸ்பைடீரியன் மருத்துவமனையின் கொரோனா அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய டாக்டர் லோர்னா பிரீன் என்ற பெண் மருத்துவர் கண்ணெதிரே கொரோனா பாதிப்பினால் காப்பாற்ற முடியாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற்கொ லை செய்து கொண்டது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறன்று அவர் தன் முடிவைத் தானே தேடிக்கொண்டார் என்ரு லோர்னா பிரீனின் தந்தை டாக்டர் திலீப் பிரீன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார். அமெரிக்க கொரோனா பலி எண்ணிக்கை 59,000 த்தைக் கடந்துள்ள நிலையில் நியூயார்க்கில் மட்டும் 17,500 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.


லோர்னா பிரீன் கரோனாவினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் மருத்துவப் பணிக்கே திரும்பியவர். தானும் பிற மருத்துவர்களும் எப்படிப் போராடியும் நோயாளிகளைக் காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே அவர்கள் உயிர்ப்பிரிவதை தன்னால் தாங்க முடியவில்லை என்று அவர் பல முறை கூறியதாக அவரது தந்தை வேதனையுடன் தெரிவிக்கிறார்.



இவரது வேதனையைப் புரிந்து கொண்ட மருத்துவமனை நிர்வாகம் இவரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறி விடுவித்தது. அம்மா, சகோதரியுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் தொடர்ந்து மன வேதனையில் இருந்ததாகவும் யாருடனும் சரியாகப் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நியூயார்க்கில் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கடும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 300 மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments