உலகில் இதுவரைக்கும் வந்த கொடிய வைரஸ் களும், அது காவு கொண்ட உயிர்பலிகளும் ! அதிர்ச்சி ரிப்போர்ட் !




தொற்று நோய் என்ற வார்த்தைக்கு அறிவியலாளர்களும் , விஞ்ஞானிகளும் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு அர்த்தத்தை வழங்கி வருகின்றனர், ஆனால் அனைவரும் ஒப்புக் கொள்ளும் ஒரு செய்தி என்னவென்றால் , ஒரு புவியியல் பிராந்தியத்தில் வழக்கத்தை விட மிக அதிகமான பாதிப்பை உண்டாக்கும் விரைந்து பரவக்கூடிய ஒரு நோய் தொற்று நோய் என்பதாகும்.காலரா , பிளேக் , பெரியம்மை , இன்ப்ளூயன்சா போன்றவை மனித வரலாற்றில் அதிகமான உயிரைக் குடித்த நோய்களாக அறியப்படுகின்றன. இந்த நோயின் தாக்கம் பல நாட்டு எல்லைகளைக் கடந்து ஒரு தொற்று நோயாக பரவி இருந்தன. குறிப்பாக பெரியம்மை, தன்னுடைய வரலாற்றில் 12,000 ஆண்டுகள் அச்சுறுத்தி கிட்டத்தட்ட 300-500 மில்லியன் மக்கள் உயிர் இழந்திருக்கின்றனர்.சமீபத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒரு கிருமி எபோலா வைரஸ் . இது ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கி உள்ளது. ஒருநாள் இல்லை ஒருநாள் இதுவும் ஒரு தொற்று நோயாக மாறலாம். ஆனால் இப்போதைக்கு இல்லை. எனவே இந்த பட்டியலில் இந்த கிருமி பற்றிய தகவல் இடம்பெறவில்லை.
​HIV / எயிட்ஸ் (உச்சக்கட்டம் 2005-2012)



இறப்பு எண்ணிக்கை - 36 மில்லியன்

காரணம் - HIV / எயிட்ஸ்

காங்கோ ஜனநாயகக் குடியரசில் முதலில் 1976ம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட எச்ஐவி/எய்ட்ஸ் என்பது உண்மையிலேயே தன்னை உலகளாவிய தொற்று நோயாக நிரூபித்துள்ளது, 1981 க்கு பின்னர் 36 மில்லியன் மக்கள் இந்தக் கொடிய நோயால் உயிரிழந்துள்ளனர். தற்போது 31 மில்லியன்-35 மில்லியன் மக்கள் HIV பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளில் ஜனத்தொகையில் 5% மக்கள் தோராயமாக 21 மில்லியன் மக்கள், HIV பாதிப்பைக் கொண்டுள்ளனர்.

விழிப்புணர்ச்சியும், புதிய சிகிச்சைகளும் வளர்ச்சி பெற்ற இந்த காலத்தில், நிர்வகிக்கக்கூடிய ஒரு நோயாக HIV உள்ளது. இந்த பாதிப்பைக் கொண்ட நோயாளிகள் கூட தரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். 2005ம் ஆண்டு மற்றும் 2012ம் ஆண்டிற்கு இடையில் HIV /எயிட்ஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.2 மில்லியன் அளவில் இருந்து 1.6 மில்லியன் அளவாக குறைந்திருக்கிறது என்று இறப்பு குறித்த உலகளாவிய ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

​ஃப்ளு நோய்த்தொற்று (1968)

இறப்பு எண்ணிக்கை- 1 மில்லியன்

காரணம் - இன்ப்ளூயன்சா

இரண்டாம் நிலையில் இருப்பது ஃப்ளு நோய்த்தொற்று. இதனை “தி ஹாங்காங் ஃப்ளு” என்று குறிப்பிடுவர்.

1968ம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வகை ஃப்ளு தொற்றுநோய், இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் H3N2 திரிபு காரணமாக ஏற்பட்டது. இது H2N2 துணைவகையின் மரபணு வகையை சேர்ந்ததாகும். முதன்முதலில் July 13, 1968 ஹாங்காங்கில் முதல் வழக்கு கண்டறியப்பட்டது. அடுத்த 17 நாட்களில் இந்த வைரஸ் சிங்கப்பூர் மற்றும் வியட்நாமில் கண்டறியப்பட்டது. அடுத்த மூன்று மாதங்களில் பிலிப்பைன்ஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இந்த நோய் பரவியது. மற்ற நோய்களுடன் ஒப்பிடும்போது 1968ம் ஆண்டு பரவிய இந்த நோயால் ஏற்பட்ட இறப்பு விகிதம் 0.5% என்றாலும் அந்த நேரத்தில் ஹாங்காங் ஜனத்தொகையில்15% பேர் இந்த நோயால் உயிரிழந்தனர்.

​ஆசிய ஃப்ளு (1956-1958)

இறப்பு எண்ணிக்கை - 2 மில்லியன்

காரணம் - இன்ப்ளூயன்சா

ஆசிய ஃப்ளு என்னும் தொற்றுநோய் H2N2 துணைவகையின் இன்ப்ளூயன்சா ஏ வகையால் உண்டாகும் தொற்றுநோயாகும். இந்த நோய் 1956ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. 1958ம் ஆண்டு வரை இதன் தாக்கம் இருந்து வந்தது. அதன் இரண்டு ஆண்டு காலத்தில், ஆசிய ஃப்ளு , சீன மாகாணமான குய்சோவிலிருந்து சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குப் பரவியது. ஆசிய ஃப்ளு நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆதாரங்களின்படி வெவ்வேறாக இருக்கும் நிலையில் உலக சுகாதார நிறுவனம் தோராயமாக 2 மில்லியன் மக்கள் இந்த நோயால் இறந்ததாக அறிவித்தது, இதில் 69,800 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

​ஃப்ளு தொற்றுநோய் (1918)

இறப்பு எண்ணிக்கை - 20-50 மில்லியன்

காரணம் - இன்ப்ளூயன்சா

1918-1920 ம் ஆண்டுகளுக்கு இடையில் உலகம் முழுவதும் ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தும் நோயாக கண்டறியப்பட்டது இன்ப்ளூயன்சா . உலக ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அதாவது 20 மில்லியன் முதல் 50 மில்லியன் மக்கள் அவர்கள் உயிரை இழந்தனர். 500 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்ட இந்த நோயால் இறந்தவர்கள் விகிதம் 10-20% என்று கணக்கிடப்பட்டது. முதல் 25 வாரங்களில் 25 மில்லியன் மக்கள் இறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1918ம் ஆண்டு தாக்கப்பட்ட ஃப்ளு இன்ப்ளூயன்சா வைரஸ் மற்ற இன்ப்ளூயன்சா வைரஸை விட வித்தியாசமானது என்பதை அதன் மூலம் பலியானவர்கள் மூலம் கண்டறிந்து கொள்ள முடிந்தது. காரணம் இதற்கு முன்னர் கண்டறியப்பட்ட இன்ப்ளூயன்ஸாவால் பாதிக்கப்பட்டவர்கள் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பலவீனமான நோயாளிகள். ஆனால் இந்த முறை பலமான மற்றும் இளம் வயதினரை வந்த நோய் அதிகம் பாதித்தது. பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டவர்கள் உயிரோடு இருந்தனர்.

​6வது காலரா தொற்றுநோய் (1910-1911)

இறப்பு எண்ணிக்கை - 800,000க்கும் அதிகமானோர்

காரணம் - காலரா

காலரா தன்னுடைய 5 முன்தோன்றல்கள் போலவே இந்தியாவில் கண்டறியப்பட்டது. மேலும் இதனால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 800,000 ஆகும். ஆனால் இதற்கு பிறகு மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா , கிழக்கு ஐரோப்பா , ரஷ்யா போன்ற நாடுகளிலும் இந்த நோய் பரவியது. 6வது முறை காலரா பரவியதற்கு காரணமும் அமெரிக்கா தான். பழைய அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட அமெரிக்க உயர் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களை தனியாக பிரித்து வைப்பதன் மூலம் நோயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனால் அமெரிக்காவில் காலரா பாதிக்கப்பட்டு இறந்தவர் எண்ணிக்கை வெறும் 11 மட்டுமே. 1923ம் ஆண்டு காலரா முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் , இன்றும் இந்தியாவில் சில வழக்குகள் இருந்து வருகின்றன.

​ஃப்ளு தொற்றுநோய் (1889-1890)

இறப்பு எண்ணிக்கை - 1 மில்லியன்

காரணம் - இன்ப்ளூயன்சா

முதலில் “ஆசிய காய்ச்சல்” அல்லது “ரஷ்ய காய்ச்சல்” என அழைக்கப்பட்டாலும், இந்த திரிபு இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் துணை வகை H2N2 இன் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது, இருப்பினும் சமீபத்திய ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் அதற்கு பதிலாக இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ் துணை வகை H3N8 என்று கண்டறிந்துள்ளன. முதன்முதலாக 1889ம் ஆண்டு மே மாதம் மூன்று வெல்வேறு தொலைவான இடங்களில் முதல் வழக்குகள் கண்டறியப்பட்டன.

மத்திய ஆசியாவில் துர்கிஸ்தான்- புகாரா , வடமேற்கு கனடாவின் அதபாஸ்கா மற்றும் கிரீன்லாந்து ஆகியவை அந்த மூன்று இடங்களாகும். குறிப்பாக 19ம் நூற்றாண்டில் ஜனத்தொகை நகர்ப்புறங்களில் மிக வேகமாக அதிகரித்ததன் காரணமாக இந்த ஃப்ளு மிக வேகமாகப் பரவியது. பாக்டீரியாலஜி சகாப்தத்தின் முதல் உண்மையான தொற்றுநோயாக இது அறியப்பட்டபோதிலும் , இதில் இருந்து பல விஷயங்கள் அறிந்து கொள்ளப்பட்டன. 1889-1890ம் ஆண்டு வரை இந்த கொடிய நோய் ஒரு மில்லியன் உயிரைக் குடித்தது.

​3வது காலரா தொற்றுநோய் (1852–1860)

இறப்பு எண்ணிக்கை - 1 மில்லியன்

காரணம் - காலரா

7 முறை காலரா தொற்றுநோய் உலகை அச்சுறுத்தியதில் மிகவும் அபாயகரமான தாக்கத்தை ஏற்படுத்தியது 3வது சுற்று காலரா தொற்றுநோய். 19ம் நூற்றாண்டில் 1852 முதல் 1860ம் ஆண்டு வரை இந்த நோய் உலகை ஆட்டிப்படைத்தது . முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று காலராவைப் போல் மூன்றாவது சுற்று காலராவின் தொடக்கமும் இந்தியாவில் தான் தொடங்கியது. கங்கை ஆற்றின் டெல்டா பகுதியில் தொடங்கிய இந்த காலரா ஆசியா, ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா , ஆப்பிரிக்கா போன்ற இடங்களுக்குப் பரவியது. ஒரு மில்லியன் மக்கள் இந்த தொற்றுநோயால் உயிரிழந்தனர்.

பிரிட்டிஷ் மருத்துவர் ஜான் ஸ்னோ, லண்டன் மாநகரில் ஒரு ஏழ்மையான பகுதியில் பணி புரிந்தபோது, காலரா வழக்குகளை தொடர்ச்சியாக கண்காணித்து, இறுதியில் சுத்தமில்லாத நீர் வழியாகவே இந்த நோய் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்தார்.துரதிர்ஷ்டவடமாக இந்த செய்தியை அவர் கண்டறிந்த அதே 1854ம்ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக , பிரிட்டனில் இந்த தொற்றுநோய் காரணமாக 23,000 மக்கள் உயிரிழந்தனர்.

​பிளாக் டெத் (black death)(1346-1353)

இறப்பு எண்ணிக்கை - 75-200 மில்லியன்

காரணம் - புபோனிக் பிளேக்

1346ம் ஆண்டு முதல் 1353ம் ஆண்டு வரை ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் 75-200 மில்லியன் மக்கள் பிளேக் நோய் தாக்கி உயிரிழந்தனர். ஆசியாவில் தோன்றியதாகக் கருதப்பட்ட பிளேக், வணிகக் கப்பல்களில் அடிக்கடி காணப்படும் எலிகள் மீது வாழும் உண்ணிகள் வழியாக கண்டங்களைத் தாண்டி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த காலத்தில் துறைமுகங்கள் நகரங்களின் மைய இடங்களாக இருந்ததால் எலிகள் மற்றும் உண்ணிகள் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடமாக இருந்து, இந்த கொடும் பாக்டீரியா மூன்று கண்டங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியது

​ஜஸ்டினியன் பிளேக் (541-542)

இறப்பு எண்ணிக்கை - 25 மில்லியன்

காரணம்- புபோனிக் பிளேக்

ஐரோப்பா ஜனத்தொகையில் பாதிக்கும் மேலானோர் உயிரிழக்க காரணமாக இருந்த ஜஸ்டினியன் பிளேக், புபோனிக் பிளேக் என்று கண்டறியப்பட்டது. இது பைசண்டைன் பேரரசு மற்றும் மத்திய தரைக்கடல் துறைமுக நகரங்களில் 25 மில்லியனுக்கு அதிகமான மக்களை சூறையாடியது. பொதுவாக புபோனிக் பிளேக்கின் முதல் பதிவு செய்யப்பட்ட சம்பவமாகக் கருதப்படும் ஜஸ்டினியன் பிளேக் உலகில் அதன் அடையாளத்தை உண்டாக்கும் விதமாக, கிழக்கு மத்தியதரைக் கடலின் மக்கள்தொகையில் கால் பகுதியை அழித்தது மற்றும் கான்ஸ்டான்டினோபில் நகரத்திற்கு பேரழிவை உண்டாக்கியது. ஒவ்வொரு நாளும் 5,000 பேர் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதன் விளைவாக நகரத்தின் மக்கள் தொகையில் 40% பேர் இறந்தனர்.

​குயிண்டோனின் பிளேக்(165கிபி)wik

இறப்பு எண்ணிக்கை - 5 மில்லியன்

காரணம்- தெரியவில்லை

ஆசியா மைனர், எகிப்து, கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகியவற்றை பாதித்த ஒரு பண்டைய கால தொற்றுநோயான அன்டோனைன் பிளேக், கேலன் பிளேக் என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் இது பெரியம்மை அல்லது தட்டம்மை என்று கருதப்படுகிறது, இருப்பினும் இந்த தொற்றுநோயின் உண்மையான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

ரோம் நாட்டு சிப்பாய்கள் 165கிபியில் மெசபடோமியாவில் இருந்து, திரும்பப் போகும்போது இந்த பெயர் தெரியாத தொற்றுநோயை தங்களுடன் எடுத்துசென்று விட்டனர். இதனால் ரோம ராணுவத்தில் இந்த நோய் பரவி 5 மில்லியனுக்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதனால் ரோம இராணுவமே அழிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments