விஷ கடி முதலுதவி

விஷ உயிர்கள் கடித்தால் உடனே மருத்துவரிடம் சென்று வைத்தியம் செய்து கொள்ள வேண்டும். எந்த வகையான பூச்சி கடித்தது என்று தெளிவாக கூற வேண்டும். பாம்பு, தேள், பூரான் மற்றும் சிலந்தி போன்ற விஷமுள்ள உயிரினங்கள் கடிப்பதால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே உடனடியாக வைத்தியம் செய்துகொள்ள வேண்டும். மருத்துவரை அணுகுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் உடனடியாக கீழ்கண்ட முதலுதவி சிகிச்சைகளை செய்து, உடனடியாக மருத்துவரை சந்திக்க செல்ல வேண்டும்.


விஷ ஜந்துக்கள் கடித்த உடன் செய்ய வேண்டிய அவசர மருத்துவம் 




கண்ணாடி விரியன்:- 

        பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.


நல்ல பாம்பு:- 

             வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.


தேள்:-

           கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.


சிலந்தி:-

       ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.


வெறிநாய்:- 

       மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.



எலி:-

                    வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.


பூனை:- 

                   தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.


பூரான்:-

                    பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.


நட்டுவாக்காலி:- 

       கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.


இது அவசர உதவி மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு உடனடியாக வைத்தியரை சந்தித்து சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும். 

Post a Comment

0 Comments