ஒற்றைத் தலைவலி என்றால் உயிரே போய்விடும். அந்தளவிற்கு கொடுமையானதாக இருக்கும். அத்தகைய ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது? அதை எப்படி சரி செய்வது? அனைவருக்கும் அது வருமா? உடனடியாக அதை எப்படி போக்கி நிவாரணம் பெறுவது என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
ஒற்றைத் தலைவலி
தாங்க முடியாத வலி. காலையில் எழுந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து, பிறகு நேரம் ஆக ஆக.. அப்படியே விண் விண் என தெரிக்கும். அப்போது யார் எது பேசினாலும் பயங்கரமாக கோபம் வெடிக்கும். அன்புடன் பேசினால் கூட ஏதோ பயங்கரமான ஆயுதம் கொண்டு தாக்கியது போல கோபம் கொப்பளிக்கும்.
காரணம் தாங்க முடியாத வலியால் வரும் எதிர்ப்புணர்வுதான்.
ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது?
இதற்கு குறிப்பிட்ட காரணங்கள் இருப்பினும் முதன்மையானது அதிக மன அழுத்தம்தான். நம்பவே முடியாது. ஆனால் அது தான் உண்மை. தொடர்ச்சியாக ஒரே வேலையை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இது வருவது சாதாரணம்.
உடல் வெப்பம்
உடலில் வெப்பம் அதிகருக்கும்போது கண்டிப்பாக சீரற்ற வெப்பநிலையில் ஒற்றைத் தலி வந்துவிடும்.
மன அழுத்தம்
அதிக மன அழுத்த த்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயல்பாகவே ஒற்றைத்தலைவலி வந்துவிடும்.
மன குழப்பம்
.அதிகமான மன குழப்பத்தில் இருப்பவர்களுக்கு தலைவலி ஏற்படுவது இயல்பு
சளி, காய்ச்சல்
சளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அதற்கான மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகு இறுதி விளைவாக தலைவலி ஏற்படும்.
உப்பு, காரம், புளிப்பு
உண்ணும் உணவில் உப்பு, காரம், புளிப்பு மூன்றும் சமநிலையில் இருந்தால் எந்த நோயும் அண்டாது. ஆனால் காரம் மட்டுமே அதிகமாக தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக தலைவலி வந்து பாடாய் படுத்தும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் அவதி படுபவர்களுக்கு இரத்த ஓட்டம் சீரில்லாது இருப்பதால் இத்தகைய தலைவலிகள் வந்து சிரமத்திற்கு உள்ளாக்கும்.
ஒற்றைத்தலைவலிக்கான அறிகுறிகள்
ஒற்றைத்தலைவலி வருவதை எப்படி தெரிந்துகொள்வது? என்னென்ன அறிகுறிகள் காட்டும்?
எந்த நோயும் வருவதற்கு முன்பு சில குறிகளை காட்டும். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் பிறகு, நோயின் தீவிரம் அதிகமாகிவிடும்.
இப்படி சில அறிகுறிகளை காட்டும்.
- கண்ணில் பளிச் பளிச்சென மின்னுவது போல இருப்பது
- கண்ணிற்கு முன்பாக பூச்சிகள் (பொறி) பறப்பது போல இருப்பது
- முன்னுள்ள பொருட்கள் வட்ட வடிவில் தெரியாமல் போவது
- எதிரில் இருக்கும் உருவம் கருப்பாக தெரிவது
- கை, கால்களில் ஒரு பக்கமாக துடிப்பது
- வாந்தி அல்லது குமட்டல் உணர்வு
ஒற்றைத் தலைவலி எப்படி ஏற்படுகிறது?
5-ஹைட்ராக்சிரிப்டமின் (5-Hydroxytryptamine) எனும் அமிலத்தின் அளவும் ரத்தத்தில் அதிகரிக்கும். அப்போது ஏற்படும் சீரற்ற ரத்த ஓட்டத்தினால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, வலி உணரப்படும். வலி உணர்ச்சியைத் தரக்கூடிய ட்ரைஜெமினல் (Trigeminal) என்னும் அமிலமும் அதிகம் சுரந்து, வலி உணர்வை அதிகரிக்கும். இவ்வாறு உண்டாகும் வலி, அதிகபட்சம் நான்கு மணி நேரம் வரையிலும் நீடிக்கலாம். சிலருக்கு இரண்டு பக்கங்களிலும் வலி வரலாம்.
பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஒற்றைத்தலைவலி வரும். இரவில் அதிக நேரம் கண் விழித்திருத்தல், காலையில் அதிக நேரம் உறங்குதல், வெயிலில் அதிக நேரம் இருப்பதும்கூட தலைவலிக்குக் காரணமாகிவிடும். உடலின் வேறு பிரச்னைகளுக்காக அடிக்கடி மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வோருக்கும், ஒற்றைத்தலைவலி ஏற்படும் வாய்புகள் அதிகம்.
தலைவலி வராமல் தடுப்பது எப்படி?
மனதை அமைதியாக வைத்துக்கொள்ள பழகி கொண்டாலே பாதி நோய்கள் நம்மை விட்டு அகன்றுவிடும். ஒற்றைத் தலைவலிக்கும் அப்படிதான்.
- பக்கவாத ஒற்றைத் தலைவலி (Hemiplegic Migraine ),
- கண் நரம்பு ஒற்றைத்தலைவலி (Ophthalmoplegic Migraine)
- முக நரம்பு ஒற்றைத்தலைவலி (Facioplegic Migraine)
என வலிகளில் பலவகை உள்ளன.
எந்த வகையான தலைவலி என்றாலும் தீர்க்க மருந்துகளுடன் நல்ல தூக்கம் அவசியம். உங்களுடைய உடலுக்கு தேவையான - போதுமான தூக்கத்தை கொடுத்தால் பல வியாதிகள் உங்களை விட்டு ஓடிவிடும். சரியான தூக்கம் ஒரு மனிதனின் மனதை அமைதி நிலைக்கு கொண்டு செல்லும். மனம் அமைதியானால் உடல் உறுப்புகள் சீராக செயல்பட ஆரம்பிக்கும். உடல் உறுப்புகள் சீராக செயல்பட ஆரம்பித்தால் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்படும். சீரமைப்பிற்கு பிறகு உடல் இயல்பு நிலையை அடையும்.
- மனதுக்கு பிடித்தமான வேலைகளை செய்தல்.
- வயல்வெளி, பூங்கா, இயற்கை காட்சிகளை ரசித்தல் போன்ற செயல்களில் ஈடுபடல்
- குழந்தைகளுடன் விளையாட்டில் ஈடுபடல் என இயற்கையாக சில செயல்பாடுகளில் ஈடுபட்டால் தலைவலி குறையும்.
- முறையான உடற்பயிற்சி செய்தால் நிச்சயமாக தலைவலி பிரச்னை தீரும். ஏனென்றால் உடற்பயிற்சி மூலம் மட்டுமே உடலில் உள்ள சுரப்பிகளை இயல்பாக தூண்ட முடியும்.
- நல்ல காற்றோற்றமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்வது தலைவலி பிரச்னையை போக்கும். புழுதி, தூசி, புழுக்கம் மிகுந்த இடங்களில் வாழ்பவர்களுக்கு 90% தலைவலி பிரச்னைகள் ஏற்படும்.
- டீ, காபி, சிகரெட் உடனடி சுறுசுறுப்பு கிடைப்பது போல தோற்றத்தை ஏற்படுத்துபவை. ஆனால் அது நிரந்தரமல்ல. இதனால் கூட தலைவலி ஏற்படும்.
- உணவு முறையில் மாற்றம் செய்தல் நல்ல தீர்வு கொடுக்கும்.ஒரே மாதிரியான உணவினை உட்கொள்ளாமல் சரிவிகித உணவை எடுத்துக்கொள்வதால் உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் சீராகும்.
ஒற்றை தலைவலி-க்கு இயற்கை வைத்தியம்
ஒற்றைத்தலைவலி வராமல் தடுக்க...
சுக்கு, மிளகு, திப்பிலிப் பொடியை மூன்று விரல்களால் எடுத்து, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். அதன் பின், மல்லிப்பொடி ஒரு தேக்கரண்டி, பனை வெல்லம், சுக்குப்பொடியை நீர்விட்டு காய்ச்சிக் குடித்துவரலாம். இது, பெண்களுக்கு உண்டாகும் கர்ப்பப்பை கோளாறுகளையும் சரிப்படுத்தும்.
இரவு படுக்கச் செல்லும் முன், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா சூரணம்) பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். இதனால், ரத்தம் சுத்தமாகி, ரத்தஓட்டம் சீராகும். இதனால், ஒற்றைத்தலைவலி மட்டும் அல்ல, வேறு எந்த நோயும் நெருங்காது.
20 மி.லி., தயிரில், அரை லிட்டர் நீர் சேர்த்து, அதில் சிறிதளவு இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, பெருங்காயம், முடிந்தால் சிறிதளவு நெல்லிக்காய் சேர்த்துக் கரைத்து, மோராகப் பருகலாம். இதனால், செரிமானம் சீராகும்; பித்தம் குறையும்; கோடை காலத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.
சளி, காய்ச்சல், உடல் வெப்பம் அதிகரித்தல், மூளையில் ஏற்படும் கட்டி போன்ற பிரச்னைகளால் கூட தலைவலி ஏற்படும். எதனால் தலைவலி ஏற்பட்டது என்பதை மருத்துவர் துணையுடன் ஆய்ந்தறிந்து அதற்கேற்ற மருந்து, ஓய்வு எடுத்துக்கொண்டால் எந்த ஒரு ஒற்றைத் தலைவலி நோயும் பறந்துவிடும்.
0 Comments