முடி உதிர்வை தடுக்கும் முடக்கற்றான் கீரை
தலை முடி உதிர்வு இப்பொழுது ஆண் பெண் பேதமின்றி அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்னை. பூமியின் வெப்பநிலை அதிகரித்திருக்கும் வேளையில் எங்கு பார்த்திடினும் ஏதேனும் ஒரு உடல் கோளாறுகள் ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகின்றனர். அவற்றில் முதன்மையானதுதான் தலைமுடி உதிர்தல் பிரச்னை.வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.
இரவில் நெல்லிக்காய்களை தண்ணீ ரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீ ரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து த லையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.
தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.
0 Comments